ரஜினியை சீண்டிய தொல் திருமாவளவன்… பதிலடி கொடுத்த எச்.ராஜா!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தொல் திருமாவளவன், “70 வயது வரை அரிதாம் பூசி எல்லாவற்றையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுகாலம் மக்களுக்காக உழைத்த விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது” என்று மறைமுகமாக ரஜினியை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
70 வயதான வரை அரிதாரம் பூசி நடித்தவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வர நினைக்கும்போது விடுதலைச் சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்று திருமாவளவன் பேசியதற்கு எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தொல் திருமாவளவன், “70 வயது வரை அரிதாம் பூசி எல்லாவற்றையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுகாலம் மக்களுக்காக உழைத்த விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது” என்று மறைமுகமாக ரஜினியை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “இவர் எ;ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியிலிருந்துகொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி” என்று கூறியுள்ளார்.
இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி https://t.co/D6XyjORVqL
— H Raja (@HRajaBJP) February 24, 2020
2011க்குப் பிறகு மதுரையில் நடந்த கலவரம் தொடர்பாக திருமாவளவன் “டெல்லியிலிருந்துகொண்டே என்னால் தென் மாவட்டங்களைத் தீப்பிடிக்க வைக்க முடியும்… ஆனால் அப்படி செய்யக்கூடியவன் இல்லை திருமாவளவன்” என்று பேசியிருந்தார். ஆனால், பாதியை மறைத்து மீதியை மட்டும் மீண்டும் மீண்டும் பரப்பி வரும் எச்.ராஜாவுக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.