ரஜினியை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி மாணவன்! 

 

ரஜினியை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி மாணவன்! 

கேரள முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டார். 

கேரள மாநிலம் ஆலந்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரான பிரணவ், மகா புயல் பாதித்தப்போது அம்மாநில முதல்காஇச்சர் பினராயி விஜயனை சந்தித்து தன்னால் முடிந்த நிதியுதவியை அளித்து வாழ்த்து பெற்றார். பிரணவிடம் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன், தனது கைகளால் அவரது கால்களை குலுக்கி பாராட்டினார். தொடர்ந்து பிரணவ் அவருடன் செல்பி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கிரிக்கெட் கடவுள் சச்சினையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்திக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என பிரணவ் கூறியிருந்தார். 

 

 

இந்நிலையில், இன்று சூப்பர் ஸ்டாரை சந்தித்த பிரணவ், காலால் வரைந்த ஓவியத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். தொடர்ந்து ரஜினிகாந்துடனும் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.