ரஜினியை ஆதரிக்கத் தயார்! – பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்

 

ரஜினியை ஆதரிக்கத் தயார்! – பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்

சென்னை வந்த சுப்பிரமணிய சுவாமியிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், “அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா டயலாக் பேசிக் கொண்டிருந்தால் நடிகர் ரஜினிகாந்த்தை நான் எதிர்ப்பேன். ஆனால், அவர் இந்து மதத்துக்கு ஆதரவாக பேசினால் அவரை ஆதரிப்பேன், அவருடன் இருப்பேன்.

நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்துக்கு ஆதரவாக பேசினால் அவரை ஆதரிப்பேன், அவருடன் இருப்பேன் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த சுப்பிரமணிய சுவாமியிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், “அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா டயலாக் பேசிக் கொண்டிருந்தால் நடிகர் ரஜினிகாந்த்தை நான் எதிர்ப்பேன். ஆனால்,அவர் இந்து மதத்துக்கு ஆதரவாக பேசினால் அவரை ஆதரிப்பேன், அவருடன் இருப்பேன்.
படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துவந்து சோதனை நடத்தியது சரி இல்லை என்று நடிகர் விஜய் கருதினால், வழக்கறிஞர்களை ஆலோசித்து வழக்கு தொடரலாம். ஒன்றும் இல்லை என்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர் பதவியை என்னிடம் கொடுத்தால் பொருளாதார நிலையை மாற்றிக் காட்டுவேன். மேலும், விஜய் மல்லையா, நீரவ் மோடியை பிடித்துக்காட்டுவேன்” என்றார்.