‘ரஜினியுடன் புகைப்படம்’ : வலைவிரித்த பேஸ்புக் ஆசாமி; லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த ரஜினி ரசிகை!

 

‘ரஜினியுடன் புகைப்படம்’ : வலைவிரித்த பேஸ்புக் ஆசாமி;  லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த ரஜினி ரசிகை!

நடிகர் ரஜினியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதை  நம்பி பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு:  நடிகர் ரஜினியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதை  நம்பி பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

rajini

சேலத்தைச் சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வி. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் இவர் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் பெயரை கையில் பச்சைகுத்தும் அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இவருக்கு பேஸ்புக்கில் ரஜினி பழனி என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. ரஜினி பழனியோ தமிழ் செல்வியிடம், தான் தான் ரஜினியின் நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறியதோடு, ரஜினியைச் சந்திக்க வைப்பதாகக் கூறியுள்ளார்.  இதை நம்பிய தமிழ்செல்வி நேரில் சென்ற போது,  அவரிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

rajini

இதையடுத்து ரஜினி பழனி தன்னை ஏமாற்றியதை அறிந்த தமிழ்செல்வி, பேஸ்புக்கில் அவர் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரஜினி பழனி, தமிழ்செல்வி குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

 

இதுகுறித்து கூறும் தமிழ்செல்வியின் கணவர்,  ரஜினி பழனி இதுபோன்று 30ற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் ஏமாற்றியதாகவும், ரஜினி பெயரைக் கூறிக் கொண்டு மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார்.