ரஜினியின் எண்ணங்களை புரிந்துகொண்டால் நன்மை! – ராகவா லாரன்ஸ் கவிதை

 

ரஜினியின் எண்ணங்களை புரிந்துகொண்டால் நன்மை! – ராகவா லாரன்ஸ் கவிதை

ரஜினிகாந்தின் அரசியல் பார்வை குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். 

ரஜினிகாந்தின் அரசியல் பார்வை குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். 
சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை! என்ற தலைப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:
“சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
“கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது”
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.