ரஜினியின் அரசியல் ஆரம்பம்… ஆன்மீக பாதைக்கு திரும்பும் தி.மு.க., எம்.எல்.ஏ..!

 

ரஜினியின் அரசியல் ஆரம்பம்… ஆன்மீக பாதைக்கு திரும்பும் தி.மு.க., எம்.எல்.ஏ..!

தலைவர் மற்றும் அவரது மகன் மனதில் இடம் பிடிக்க தான், இப்படி ஆன்மிக பாதைக்கு மாறிவிட்டார் என்கிறார்கள்.

ரஜினி ஆன்மிக அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். இந்நிலையில்,  சென்னையை ஒட்டியிருக்கிற வடக்கே உள்ள சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,வாக சுதர்சனமாக இருப்பவர், கட்சியிலும், மாவட்ட அளவிலும் பொறுப்பில் இருக்கிறார்.

 lord

சமீபகாலமாக இவர் மீது தலைமைக்கு நிறைய புகார்கள் போய், தலைமையும் இவர் மேல் கோபத்தில் இருப்பதாக தகவல். இதனால் எங்கே நடவடிக்கை எடுத்து விடுவார்களோ எனப் பயந்து போய் அவர் தன் அலுவலகத்தில் உள்ள உட்காரும் நாற்காலிக்கு கீழே, மந்திரித்த இரு தகடுகளை வைத்திருக்கிறார். தினமும், பூஜை, புனஸ்காரங்களை முடித்து விட்டுத்தான், வெளியில் கிளம்புகிறார். 

lord

கையில், மந்திரித்த சிவப்பு கயிறு சுத்தியிருக்கிறார். தலைவர் மற்றும் அவரது மகன் மனதில் இடம் பிடிக்க தான், இப்படி ஆன்மிக பாதைக்கு மாறிவிட்டார் என்கிறார்கள்.  அவருக்கு நிறைய திருஷ்டி இருக்கு… அதான் இப்படி மாறிவிட்டார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.