ரசிகர்கள் மூலம் அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறார் தளபதி விஜய்?

 

ரசிகர்கள் மூலம் அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறார் தளபதி விஜய்?

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விலையில்லா விருந்தகத்தை அவரது ரசிகர்கள் திறந்து வைத்துள்ளனர். 

சென்னை: நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விலையில்லா விருந்தகத்தை அவரது ரசிகர்கள் திறந்து வைத்துள்ளனர். 

பொதுவாக மக்கள் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதை விட அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் பிறந்தநாளை ஆரவாரமாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜயின் பிறந்த நாள்மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ஒரு தரப்பு ரசிகர்கள் கேக் வேட்டுவது, பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று பணத்தை வீணாக செலவு செய்தனர். 

மற்றொரு பக்கம் விஜயின் பெயரைச் சொல்லி ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் என சமூக அக்கறையோடு பயனுள்ளதாகக் கொண்டாடினர். அந்த வகையில் ’தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ மூலம் சில ரசிகர்கள் இணைந்து சேலம் மாவட்டத்தில் ‘விலையில்லா விருந்தகம்’ திறந்துவைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு தினமும் காலை 109 ஏழை எளியவர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.35 மணி முதல் 8.35 வரை 1 மணி நேரம் எழை மக்கள் அங்கு சென்று சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

vijay

இந்த நிலையில் எந்த வருடமும் இல்லாமல், இந்த முறை மற்றும் விஜய் பிறந்த நாளுக்கு இதுபோன்று ஒரு திட்டம் செயல்படுத்துவது அனைவரது மனதிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேல இதுபோன்ற நல்ல திட்டத்தைத் தனது ரசிகர்கள் மூலம் செய்து, விஜய் தனது அரசியல் எண்ட்ரிக்கு அஸ்திவாரம் போடுகிறாரோ…