ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த இளைய தளபதி விஜய்

 

ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த இளைய தளபதி விஜய்

இளைய தளபதி விஜய் தனது காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களைப் பத்திரமாக திரும்பி போக சொல்லி விஜய் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: இளைய தளபதி விஜய் தனது காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களைப் பத்திரமாக திரும்பி போக சொல்லி விஜய் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு,விவேக், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து விஜய் திரும்பும் போது சில ரசிகர்கள் அவரது காரை வேகமாக பின் தொடர முயன்றனர். அதனைத் தொடர்ந்து விஜய், தனது காரின் கதவுகளில் இருக்கும் கண்ணாடியை இறக்கி, தனது காரை முந்த முயற்சிக்காதீர்கள் எனவும் காரை பின் தொடர்ந்து வர வேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்துள்ளார். அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் .