ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து வாய்திறந்த ரெஜினா!
நடிகர் ரெஜினா தான் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்தி குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.
சென்னை: நடிகர் ரெஜினா தான் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்தி குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்டா நாள்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதையடுத்து இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு, பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் அதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த தகவல் வெளியானதிலிருந்து நடிகை ரெஜினாவின் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில்,தற்போது அது குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார். அவர் கூறியதாவது, ‘இது ஒரு ஆதாரமே இல்லாமல் எழுந்த வதந்தி. எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடந்து விடவில்லை. தற்போது படங்கள் நடிப்பதில் மட்டும் பிஸியாக இருக்கிறேன்’ என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.