ம.பி.,-யில் 4 வயது சிறுமியை சீரழித்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை

 

ம.பி.,-யில் 4 வயது சிறுமியை சீரழித்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை

மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார்

மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்றார். படுகாயத்துடன் சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்தாள்.

பின்னர் சிறுமியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மத்திய பிரதேச அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு சிறுமிக்கு பல அறுவை சிகிக்சைகள் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து மத்திய பிரதேச நீதிமன்றம் மகேந்திரசிங் கோன்ட் அப்பீல் செய்தார். இதை விசாரித்த மத்திய பிரதேச நீதிமன்றம் , ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால் மார்ச் 2-ந்தேதி தூக்கில் போடப்படுவார். அப்படி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின் கீழ் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்றனர்.