மோதிரம் வாங்குவது போல நடித்து விரல்களில் மாட்டிக் கொண்டு தப்பிய திருடர்கள்!
நகைக் கடை ஒன்றில், மோதிரங்களை வாங்கி விரல்களில் மாட்டிக் கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: நகைக் கடை ஒன்றில், மோதிரங்களை வாங்கி விரல்களில் மாட்டிக் கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுதர்சன் என்பவர் சென்னை வியாசர்பாடி இ.எச்.சாலையில் நகைக் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு நேற்று நான்கு நபர்கள் வந்துள்ளனர். அவர்களில் இருவர் மோதிரம் வாங்க போவதாக கூறி மோதிரத்தைக் காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது மோதிரத்தை பார்த்த அவர்கள் சில மோதிரங்களை விரல்களில் மாட்டிக்கொண்டு இன்னும் சில மோதிரங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த சுதர்சன், மோதிரங்களைக் கழற்றுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் திடிரென்று அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் சுதர்சன், சிசிடிவி காட்சிகளுடன் வியாசர்பாடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.