மோட்டார் பைக்கில் மோதிய கார்… தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், கொஞ்சம் கூட தயவின்றி காருக்கு அடியில் சிக்கியவரை தரதரவென இழுத்துச் சென்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் பைக்கிள் வந்தவர் மீது கார் ஒன்று மோதுகிறது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் எல்லாம் தூக்கி வீசப்படுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், கொஞ்சம் கூட தயவின்றி காருக்கு அடியில் சிக்கியவரை தரதரவென இழுத்துச் சென்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் பைக்கிள் வந்தவர் மீது கார் ஒன்று மோதுகிறது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் எல்லாம் தூக்கி வீசப்படுகிறது. பைக்கில் வந்தவர் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார். மோதிய வேகத்தில் சில விநாடிகள் கார் நிற்கிறது. பின்னர் சுதாரித்துக்கொண்ட காரை ஓட்டிவந்த நபர், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், பைக்கிள் வந்த நபரை சாலையில் தரதரவென்று இழுத்தபடி செல்கிறார். இந்த காட்சி அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
#WATCH Chhattisgarh: Two bike-borne men were hit by a car after which one of them was dragged by it on road in Raipur. Police say,"Accused has been arrested. The man who was riding the bike received minor injuries while other is seriously injured and admitted to hospital".(13.12) pic.twitter.com/vNJGga3gZM
— ANI (@ANI) December 14, 2019
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் பைக்குக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், காரை நிறுத்தாமல் இழுத்து சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.