மோடி யோக்கிமானவரா இருந்தா… பேனர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது – டிராபிக் ராமசாமி அதிரடி!!

 

மோடி யோக்கிமானவரா இருந்தா… பேனர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது – டிராபிக் ராமசாமி அதிரடி!!

மக்களை நேசிக்கும் பிரதமர் மோடி யோக்கியமானவராக இருந்தால் பேனர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

மக்களை நேசிக்கும் பிரதமர் மோடி யோக்கியமானவராக இருந்தால் பேனர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் புட்டெக்ஸ் எனும் ஆப் நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, ”தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடத்திலிருக்கும்போது, மக்களை பாதுகாக்கும் பிரதமருக்கு 41 பேனர்களா..? சட்ட விரோதமாக பேனர் வைக்கிறதே தப்பு.. அதில் என்ன அனுமதி வழங்கி பேனர் வைப்பது… முட்டாள் தனமாக உள்ளது. பேனர் விளம்பரம் இல்லாமல் பிரதமர் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? மோடி வருகிறார்.. மோடி வருகிறார் எனக்கூறி மாமல்லபுரத்தில் சிறு தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்திருக்கின்றனர்.

Modi

மானங்கெட்ட இந்த அதிமுக அரசு தானாக பதவிவிலக வேண்டும்.. இல்லையென்றால் மக்கள் ஓடஓட விரட்டி பதவி விலக வைப்பர்.  மிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம் முடிந்து ஒருமாதம் கூட நிறைவடையாத சூழ்நிலையில் மீண்டும் அதே தவறை அதிமுகவினர் செய்ய துடிக்கின்றனர். மோடி யோக்கியமாக இருந்தால்.. மக்களை மதிப்பதாக இருந்தால்.. பேனர் வைக்கும்  நிகழ்ச்சிக்கு வரக்கூடாது” எனக் காட்டமாக கூறினார்.