மோடி படத்துகு தடை விதிச்ச மாதிரி இந்த லேடி சீரிசையும் நிறுத்துங்க : குயினுக்கு தொடரும் குடைச்சல்.!?

 

மோடி படத்துகு தடை விதிச்ச மாதிரி இந்த லேடி சீரிசையும் நிறுத்துங்க : குயினுக்கு தொடரும் குடைச்சல்.!?

என்னிடம் அனுமதி வாங்காமல் எங்க அத்தை கதையை படமெடுத்து விட்டார்,அதை நிறுத்துங்க என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோர்ட்டுக்கு போயும் தடுக்க முடியாத குயினுக்கு புதுக் குடைச்சலைக் கிளப்பி இருக்கிறார்கள் கோர்ட்டில்.

என்னிடம் அனுமதி வாங்காமல் எங்க அத்தை கதையை படமெடுத்து விட்டார்,அதை நிறுத்துங்க என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோர்ட்டுக்கு போயும் தடுக்க முடியாத குயினுக்கு புதுக் குடைச்சலைக் கிளப்பி இருக்கிறார்கள் கோர்ட்டில்.

queen

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜேக்கப் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.அதில் வரும் டிசம்பர் 27,30 தேதிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக  நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய வெப் சீரீஸ் வெளிவருவதைத் தடைசெய்ய வேண்டும்.அந்த சீரீஸில் ஜெயலலிதா இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்பது போல காட்சிகள் வருகின்றன.

கடந்த தேர்தலின் போது மோடியின் பயோபிக் வெளியிட தடைவிதித்தது தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருந்தது போல,கெளதமமேனன் இயக்கிய குயின் வெப் சீரிசையும் உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை குயின் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்.தேர்தல் ஞாயமாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.இது தொடர்பாக கடந்த்  9ம் தேதியே மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துளேன்.எனவே அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து,குயின் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும்,என்று அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

queen

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. ஜெயலலிதாவைத்தான் செத்த பிறகும் வழக்குகள் துரத்துகிறது என்றால் இடையில் கெளதம் மேனன் வேறு சிக்கிக் கொண்டிருக்கிறார்.ஆமாம்,இன்னுமா திமுகவுக்கு ஜெயலலிதா பயம் போகவில்லை?.இப்பல்லாம்,அதிமுகவின் மந்திரிகளே தைரியமா பேசறாங்களே.