மோடி தமிழகத்தில் தங்கியதால் இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது என்பது மிகச்சிறந்த நகைச்சுவை : திருமா விமர்சனம்!

 

மோடி தமிழகத்தில்  தங்கியதால்  இடைத்தேர்தலில்  வெற்றி கிடைத்தது என்பது மிகச்சிறந்த நகைச்சுவை : திருமா விமர்சனம்!

தந்திரங்களைப் பற்றித் தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்ட கவலை தெரிவித்துள்ளது. 

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். 

dmk

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,’ நாங்குநேரி,  விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியான அதிமுக பாஜக பெற்றுள்ள வெற்றி மக்கள் ஆதரவு கிட்டியது என்று பொருளல்ல. தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வெற்றியை ஈட்டுவது அவர்கள் கையாளும் தந்திரங்களைப் பற்றித் தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்ட கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த தேர்தலிலும் அதே விதமான தந்திரங்களைக் கையாண்டு தான் தற்போது இடைத் தேர்தல் வெற்றிகளை ஆளும்கட்சி பறித்துள்ளது. எனவே இதை பாஜக அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு திரும்பி விட்டது என எடுத்துக்கொள்ள முடியாது.இந்த வரம்பு மீறல்கள் எல்லாம் தாண்டி மக்கள் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வாக்குகளை அளித்துள்ளனர். இந்த இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்தது தான் காரணம் என பாஜகவினர் கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை என்றே சொல்லவேண்டும். உண்மையிலேயே மக்கள் ஆதரவு தங்களுக்கு இருக்கின்றது என ஆளும் கட்சியினர் நம்பினால் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம்  கோருவதிலிருந்தே அவர்களுக்கு இந்த தேர்தல் வெற்றி எவ்வாறு ஏற்பட்டது  என்பது நன்றாக தெரியும். அதனால் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது ஆளும் கட்சியினர் தயங்குகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.