மோடியையும், அதிமுகவையும் அப்புறப்படுத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி

 

மோடியையும், அதிமுகவையும் அப்புறப்படுத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி

மோடியையும், அதிமுக அரசையும் அப்புறப்படுத்த ஆதரவு தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

நெல்லை: மோடியையும், அதிமுக அரசையும் அப்புறப்படுத்த ஆதரவு தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளை ரெட்டியார்பட்டி ரோட்டில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக வளாகத்தில் புரட்சியாளர் லெனின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிலையை அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசுகையில், 

தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி, அவர்கள் மூலம் பாரதிய ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு மிகப்பெரியது. அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அதிமுக அரசையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.