மோடியின் உரையை டிவியில் பார்த்த 20 கோடி பேர்!

 

மோடியின் உரையை டிவியில் பார்த்த 20 கோடி பேர்!

பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையை சுமார் 20 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 14 ஆம் தேதி தொலைக்காட்சி மூலம்  உரையாற்றிய பிரதமர் மோடி, மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் 4 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசிய 25 நிமிட உரையை நாடு முழுவதும் 20 கோடியே 30 லட்சம் பேர் பார்த்திருப்பதாக ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை நிர்வாகி சுனில் லல்லா தெரிவித்துள்ளார்.

மோடி

மேலும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்திருப்பதும், ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இணையத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தேடியிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.