மோடிக்கு போட்டியாக நேசமணியா? நீங்களெல்லாம் பைத்தியக்காரர்களா? – விளாசும் காயத்ரி ரகுராம்!

 

மோடிக்கு போட்டியாக நேசமணியா? நீங்களெல்லாம் பைத்தியக்காரர்களா? – விளாசும் காயத்ரி ரகுராம்!

நேசமணிக்கு நேசம் காட்டிம் நெட்டிசன்களுக்கு பிரபல நடன இயக்குநர் காய்த்ரி ரகுராம் காட்டமாக ஒரு பதிலை அளித்துள்ளார்.  

நேசமணிக்கு நேசம் காட்டிம் நெட்டிசன்களுக்கு பிரபல நடன இயக்குநர் காய்த்ரி ரகுராம் காட்டமாக ஒரு பதிலை அளித்துள்ளார்.  

நேற்று முதல் டுவிட்டரில் டிரெண்டிங்காக இருப்பது நேசமணி, #Pray For Nesamani என்பது தான். Engineers Learners என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என்று கார்த்தி பிரபாகர் பதிலளித்துள்ளார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பெயரில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.  உடனே அந்த பதிவின் கீழ் ‘அவர் எப்படியிருக்கிறார்? என மற்றொருவர் கேட்க, ‘அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்’ என்று பதிலளித்தார். இதன்மூலம் நேற்று இரவு முதல் #PrayForNesamani என்ற ஹாஷ்டாக் உலகளவில் ட்ரெண்டானது. 

aa

இதுகுறித்து பிரபல நடன இயக்குநர் காய்த்ரி அவரது ட்விட்டர் பக்கத்தில், “சமூக வலைதளவாசிகள் பைத்தியகாரகளாக மாறிவிட்டீர்களா? சிறந்த காமெடியை தேவையில்லாத ஹேஷ்டேக்காகவும், அற்பமான ஜோக்காகவும், மீம்ஸ்காகவும் பயன்படுத்துகிறீர்கள். மோடிக்கு எதிராக கிளம்ப இதெல்லாம் ஒரு யோசனையா.. இத பார்த்த ரொம்ப கீழ்தரமான யோசனையா இருக்கு. உலகத்தில் உள்ளவர்கள் அனைவருக்கு நமக்கு மூளையே இல்லனு நினைச்சிடுவாங்க.. நேசமணிக்காக பதிவிடுபவர்களை பார்த்தால் கேவலமாக இருக்கிறது. அவ்வளவு முட்டாள்களா? நீங்களாம்” என குறிப்பிட்டுள்ளார்.