மோடிக்கு கொடுத்ததே திருட்டு சிலை தான் – ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி!

 

மோடிக்கு கொடுத்ததே திருட்டு சிலை தான் – ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி!

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்று  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்று  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவல்துறையையும், நீதித்துறையையும் அவதூறாகப் பேசினார். இந்தச் சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். 

இந்நிலையில்  திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கடத்தப்பட்ட சிலைகளை அதிரடி சோதனையில் கைப்பற்றி வரும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு வாழ்த்துக்கள்.சிலை கடத்தலுக்கு முக்கிய காரணமே அறநிலையத்துறை ஊழியர்கள் தான். அறநிலைத்துறை, இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக இருக்கிறது. வேற்று மதத்தவர் அறநிலைத்துறையில் வேலை செய்யக்கூடாது என்பதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் . பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான்’ என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் அவர் அறநிலையத் துறையினரை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.