மோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

 

மோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

தேர்தலின் போது மட்டும் வந்து மக்களிடம் வாக்கு கேட்கும் கட்சி திமுக இல்லை, மக்களுக்காக எப்போதும் பணியாற்றும் கட்சி தான் திமுக.

 நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுக சார்பாக விக்கிரவாண்டியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியில் உள்ள அனைத்து பகுதிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

Udhayanidhi stalin

அப்போது பேசிய உதயநிதி, தேர்தலின் போது மட்டும் வந்து மக்களிடம் வாக்கு கேட்கும் கட்சி திமுக இல்லை, மக்களுக்காக எப்போதும் பணியாற்றும் கட்சி தான் திமுக. இந்த இடைத்தேர்தலில் புகழேந்தியை வெற்றி பெறச் செய்தால் சட்டமன்றத்தில் அவர் உங்களுக்காகப் பேசுவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவரே சொல்லிக் கொள்ளும் தலைவர் தான் தற்போது ஆட்சியில் இருக்கிறார். அதனால் மக்களைப் பற்றி கவலை கொள்ளாத அதிமுக வெற்றி பெறக் கூடாது என்றும் புகழேந்தியை வெற்றி பெற செய்து அவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Udhayanidhi

மேலும், தமிழகத்திற்கு வருவதற்கு மோடி பயந்ததால் தான், இங்குள்ள மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் அவர் மாமல்லபுரத்திற்கு வெட்டி   கட்டி வந்துள்ளார் என்று இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.