மேம்பாலத்தில் தூங்கியவர்கள் மீது மோதிய கார் – 5 பேர் பரிதாப பலி

 

மேம்பாலத்தில் தூங்கியவர்கள் மீது மோதிய கார் – 5 பேர் பரிதாப பலி

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளிகள் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளிகள் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் இருக்கும் மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் இரவில் பாலத்தின் ஓரமுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அதிவேகமாக வந்த  கார், கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. 

இதனால் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார்  டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.