மேகதாது விவகாரம்; விரிவான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

 

மேகதாது விவகாரம்; விரிவான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி தமிழக அரசு தீர்மானமும் நிறைவேற்றியது. 

மேலும்  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புதுச்சேரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிகக் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.