மெட்ரோ ரயில்ல இதையெல்லாமா செய்வாங்க? இளைஞரின் செயலால் அதிர்ந்த பயணிகள்!

 

மெட்ரோ ரயில்ல இதையெல்லாமா செய்வாங்க? இளைஞரின் செயலால் அதிர்ந்த பயணிகள்!

நம்ம ஊர்ல தினந்தோறும் வேலைக்குப் போய் வருவதே பெரிய போராட்டம் தான். அதுவும் பேருந்துகளிலும், ரயில்களிலும் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பெண்களின் பாடு சொல்லி மாளாது. அதிகாலை நான்கைந்து மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தேவையானதைத் தயார் செய்துவிட்டு, ஓடோடி வந்து ரயிலைப் பிடித்து, பின் பணி முடித்து வீடு திரும்பும் போது, இரவு சாப்பாட்டிற்கான காய்கறிகளையும் ரயிலிலேயே சுத்தம் செய்துக் கொண்டே பயணிக்கும் பெண்களைப் பார்த்திருப்போம்.

metro train

நம்ம ஊர்ல தினந்தோறும் வேலைக்குப் போய் வருவதே பெரிய போராட்டம் தான். அதுவும் பேருந்துகளிலும், ரயில்களிலும் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பெண்களின் பாடு சொல்லி மாளாது. அதிகாலை நான்கைந்து மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தேவையானதைத் தயார் செய்துவிட்டு, ஓடோடி வந்து ரயிலைப் பிடித்து, பின் பணி முடித்து வீடு திரும்பும் போது, இரவு சாப்பாட்டிற்கான காய்கறிகளையும் ரயிலிலேயே சுத்தம் செய்துக் கொண்டே பயணிக்கும் பெண்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்து நாட்டில், மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் அப்படி அவரது பயண நேரத்தைப் பயனுள்ளதாக உபயோகப்படுத்த செய்த காரியம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

clothes

அவசர காலத்தில் செல்லக்கூடிய விரைவு பயணிகள் ரயிலான லண்டன் மெட்ரோ ரயிலில், பலரும் பயணித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டியில் பயணம் செய்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஆயாசமாக தனது பைகளில் இருந்த துணிகளை எடுத்து, தான் எடுத்து வந்திருந்த பாட்டில் நீரை பக்கெட்டில் ஊற்றி, சோப்பு நீரை கலந்துள்ளார். இந்த காட்சியைப் பார்த்ததுமே பலருக்கும், இவர் என்ன செய்யப் போகிறார்? என அதிர்ச்சியாகியுள்ளனர். 
மேற்கொண்டு அந்த இளைஞர், துணியைத் துவைத்து கசக்கிப் பிழியவும் ஆரம்பித்து விட்டார். இதையும் அருகில் இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் எல்லோரும் தன்னையே கவனிப்பதை கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத அந்த இளைஞர், தான் எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து, அதில் துணிகளைக் காயப் போட்டு விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செய்கை அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.