மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

 

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நக்கீரன் இதழின் தலைமை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புனே செல்லும் பொருட்டு சென்னை விமான நிலையம் வந்த அவரை 4 போலீசார் கொண்ட தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்தெந்த பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பன உள்ளிட்ட தகலவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவி குறித்து நக்கீரன் வார இதழில் கட்டுரை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.