“மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணுக்கு மூக்கு போச்சு”-கன்னிப்பெண்ணை கடத்தும் போது மூக்கை வெட்டிய கயவர்கள் …  

 

“மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணுக்கு மூக்கு போச்சு”-கன்னிப்பெண்ணை கடத்தும் போது மூக்கை வெட்டிய கயவர்கள் …  

ஒரு வேதனையான  சம்பவத்தில், குருக்ராம் பிரிவு 29 காவல் நிலையத்தின் கீழ் உள்ள சக்கர்பூர் கிராமத்தில் ஒரு தலித் சிறுமியை கடத்ததும் முயற்சி தோல்வியுற்றதால்  அப்பெண்ணின்  மூக்கை ரௌடிகள்  வெட்டினர்

ஒரு வேதனையான  சம்பவத்தில், குருக்ராம் பிரிவு 29 காவல் நிலையத்தின் கீழ் உள்ள சக்கர்பூர் கிராமத்தில் ஒரு தலித் சிறுமியை கடத்ததும் முயற்சி தோல்வியுற்றதால்  அப்பெண்ணின்  மூக்கை ரௌடிகள்  வெட்டினர்
கவுரவ் யாதவ், ஆகாஷ் யாதவ், சதீஷ் யாதவ், மோனு யாதவ் மற்றும் லீலு யாதவ் ஆகியோர் பூனம் குமாரி என்ற பெண்ணை  கடத்துவதற்காக அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது பூனமின் சகோதரர்கள் அவர்களை  தடுத்தனர். அவரை  வெளியே இழுக்க முடியாததால் அவர்கள் குடும்பத்தை தாக்கினர், கவுரவ் மற்றும் ஆகாஷ் சிறுமியை கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் தாக்கி மூக்கின் ஒரு பகுதியை வெட்டினர்

“அவர்கள் கிராமத்தின் ரௌடிகள், வழக்கை வாபஸ் பெற வைக்க பொது மக்களிடம் சண்டையிடுவதே அவர்களின் வேலை அவர்கள் எங்களிடமும் அவ்வாறே செய்தார்கள் அதனால் நாங்கள் பயப்படுகிறோம்” என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் திவீன் தயால் காவல் நிலையத்தில்  குண்டர்களுக்கு எதிராக கூறினார்.  

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 147, 148, 149, 323, 506, 452,3 65 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். அவர்களை கைது செய்ய முயற்சிக்கிறோம்” என்று காவல் நிலைய ஏ.எஸ்.ஐ. அரவிந்த்குமார் தெரிவித்தார்.