முரசொலி மூலப்பத்திரத்தை கேட்டதால் ரூ.10 லட்சம் கோடிக்கு வந்த வினை… முட்டி மோதும் ராமதாஸ்..!

 

முரசொலி மூலப்பத்திரத்தை கேட்டதால் ரூ.10 லட்சம் கோடிக்கு வந்த வினை… முட்டி மோதும் ராமதாஸ்..!

முரசொலி மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கிளப்பி விட்டதற்கு பதிலடியாக இந்த விவகாரத்தை ஸ்டாலின் எழுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

’வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையின் பல்வேறு சொத்துகளை எல்லாம் தனது குடும்பச் சொத்துக்களாக ராமதாஸ் மாற்றிக் கொண்டிருக்கிறார். வன்னியர் சொத்துக்கள் அனைத்தும் ராமதாஸின் துணைவியார் பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களைக் காப்பாற்ற அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டார் ராமதாஸ்’ என்று ஸ்டாலின் சமீபத்தில் துவைத்தெடுத்தார். 

stalin

இது வன்னிய சமுதாய மக்களை மிக உக்கிரமாக ராமதாஸை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது. ஏற்கனவே காடுவெட்டி குரு மரணத்தின் மூலம் ராமதாஸ், அன்புமணி இருவர் மீதும் பெரும் அப்செட்டில் இருக்கும் வன்னிய சொந்தங்கள் இப்போது இந்த பணம், சொத்து விவகாரத்திலும் தங்கள் தலைமை மீது ஆத்திரப்படுவதால் டெரராகி கிடக்கிறது பா.ம.க. வட்டாரம். Ramadoss

இதனை அறிந்த வன்னியர் குல சத்ரியர் சங்கத்தலைவர் பலராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ் எங்களிடம் இருந்த ராயபுரம் குட்டி செட்டித்தெரு சொத்தை நான் பராமரிப்பது கொள்வதாக கேட்டார்.நாங்களும் அதை ஒப்புக் கொண்டோம். இப்போதுவரை அதற்கான வாடகையை அவர் வாங்கிக் கொண்டிருக்கிறார். செய்தி வெளியானவுடன் நாங்கள் அவரிடம் ஒப்படைத்த சொத்தை எங்களிடம் ஒப்படைக்கும்படி கடிதம் எழுதி இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். இது ராமதாஸுக்கு அடுத்த பேரிடியாய் இறங்கி உள்ளது. 

முரசொலி மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கிளப்பி விட்டதற்கு பதிலடியாக இந்த விவகாரத்தை ஸ்டாலின் எழுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.