முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட்ட கருணாநிதி சிலை! 

 

முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட்ட கருணாநிதி சிலை! 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறது. தமிழகம் முழுவதுமுள்ள திமுகவினர் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்திலும் இன்று காலையிலிருந்து ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக  சார்பாக கருணாநிதியின் சிலை சென்னையில் திறக்கப்பட்டது. இந்த சிலை 6.3 அடி அகலம், 6.5 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் மேல் பகுதியில் கருணாநிதியின் ஐந்து கட்டளைகள் என்று ஐந்து வாசகம் இடம்பெற்றுள்ளது. அமர்ந்த நிலையில் அவர் எழுதுவது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.