மும்பை வேண்டாம்… பெங்களூருவே இருக்கட்டும்…. அடம்பிடிக்கும் பிரபல தாதா!

 

மும்பை வேண்டாம்… பெங்களூருவே இருக்கட்டும்…. அடம்பிடிக்கும் பிரபல தாதா!

200க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் நிழலுலக தாதா ரவி பூஜாரி. செனகல் நாட்டில் பதுங்கியிருந்த ரவி பூஜாரியை போலீசார் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு நடத்தினர்.

பிரபல நிழலுலக தாதா ரவி பூஜாரி தன் மீதான வழக்கை கர்நாடகாவில் இருந்து மும்பைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
200க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் நிழலுலக தாதா ரவி பூஜாரி. செனகல் நாட்டில் பதுங்கியிருந்த ரவி பூஜாரியை போலீசார் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு நடத்தினர்.தற்போது பெங்களூருவில் வைத்து இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Don Ravi Pujari

ரவி பூஜாரி தொடர்புடைய குற்றங்கள் எல்லாம் மும்பையில் நடந்தது என்பதால் ரவி பூஜாரி வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து பெங்களூருவிலேயே வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று ரவி பூஜாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரவி பூஜாரி மும்பை குண்டுவெடிப்பின் குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமானவர். இதனால் தன்னை மும்பை போலீசார் மிகக் கடுமையாக விசாரிக்கக் கூடும் என்பதால் வழக்கை மும்பைக்கு மாற்ற ரவி பூஜாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே ரவி பூஜாரி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனவே, அவரிடம் வன்முறையை கையாளக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரவி பூஜாரியிடம் மேற்கொள்ளும் விசாரணையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.