மும்பையில் 2 பேருக்கு கொரோனா! 

 

மும்பையில் 2 பேருக்கு கொரோனா! 

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4298-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரம் கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 

கொரோனா வைரஸ்

கேரளாவில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து  மகாராஷ்டிரா (5 பேர்), கர்நாடகா (4 பேர்) மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50என மதிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர், குணமடைந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் மும்பையிலுள்ள 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.