முப்பது கோடி கேட்ட மகேஷ் பாபு… நேக்காக கழட்டிவிட்ட ராம்சரண்

 

முப்பது கோடி கேட்ட மகேஷ் பாபு… நேக்காக கழட்டிவிட்ட ராம்சரண்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் மகேஷ் பாபு நடிக்கப்போகிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இரு பெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணையப்போகிறார்கள் என்றவுடன் தெலுங்கு திரையுலகமே கொண்டாடத் துவங்கியது துவங்கியது. ஆனால் தற்போது மகேஷ் பாபுவுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க பேச்சவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் மகேஷ் பாபு நடிக்கப்போகிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இரு பெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணையப்போகிறார்கள் என்றவுடன் தெலுங்கு திரையுலகமே கொண்டாடத் துவங்கியது துவங்கியது. ஆனால் தற்போது மகேஷ் பாபுவுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க பேச்சவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

mahesh-babu-87.jpg

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் மகேஷ் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதற்காக அவர் 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். இது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளத்தைக் கிடத்தட்ட நெருங்கிவிட்டது. எனவே படத்தின் இயக்குனரும் ராம்சரணும் இது பற்றி யோசிக்கத் தொடக்கி விட்டனர். 

ramcharan-90

இந்த படத்தில் மகேஷ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், படத்தின் விற்பனை சுமார் 100-120 கோடி மட்டுமே இருக்கும், முதலீடு செய்த பணத்தை விட 50-70 கோடி ரூபாய் அதிகம் லாபம் கிடைக்காவிட்டால் மகேஷ் பாபு நடிப்பதில் எந்த பயனும் இல்லை என படக்குழு நினைக்கின்றனர். இந்த படத்தில் மகேஷ் இல்லாவிட்டாலும்  100 கோடிக்கு படத்தை விற்க முடியும், அதே நேரத்தில் அவர்களின் தயாரிப்பு செலவு 30 கோடி குறைத்துக்கொள்ளலாம் என்றவுடன் மகேஷ் பாபுவை நீக்கி விட்டதாக செய்திகள் பரவுகிறது.

ராம் சரண் தானே இந்த கேமியோ கதாபாத்திரத்தை செய்யலாம் இல்லை, வேறு சின்ன ஹீரோக்களை வைத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.