முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

 

முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்பொழுது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலுமே விதவிதமான முறைகேடுகள் நடைப்பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய பாஸ்கரன் மீது, பதிவாளராக பணிபுரிந்த முத்துக்குமார், பதிவாளரின் உதவியாளராக பணியாற்றிய சக்தி சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்பொழுது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலுமே விதவிதமான முறைகேடுகள் நடைப்பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய பாஸ்கரன் மீது, பதிவாளராக பணிபுரிந்த முத்துக்குமார், பதிவாளரின் உதவியாளராக பணியாற்றிய சக்தி சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் விதிமுறைகளை மீறி முறைகேடாக பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களையும், இணை பேராசிரியர்களையும் நியமனம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

TANJORE

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2015ம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் பாஸ்கரன் பதவி வகித்தார். இந்த பதவி காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்களையும், இணை பேராசிரியர்களையும் பணி நியமனம் செய்வதில் பல்வேறு முறைகேடுகள்  நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தற்போது, இந்த வழக்கினை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.