முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி போலீசில் புகார்: காரணம் தெரியுமா?

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி போலீசில் புகார்: காரணம் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின்  மனைவி ஆர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்

தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன்பெற்றதாகத் தனது தொழில் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

AARTHI

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின்  மனைவி ஆர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது தொழில் கூட்டாளி ஒருவர் தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ. 4.5 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால்  அந்த கடனை அவர் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார்’ என்று  கூறியுள்ளார். 

மேலும் அவரது புகாரில், ‘அந்த காசை திரும்பித் தருவதாகக் கூறி அவர் அளித்த காசோலைகளும்  வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி சென்றுள்ளது. இதனால் தற்போது தனக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனக்கே தெரியாமல் என் கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இந்த விவகாரத்தில் என்னை சிக்கவைத்த அவர் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சேவாக்கின்  மனைவி ஆர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபோலீசர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.