முன்னாள் கணவரின் திருமணம் குறித்து முதல் முறையாக வாய்திறந்த அமலா பால் 

 

முன்னாள் கணவரின் திருமணம் குறித்து முதல் முறையாக வாய்திறந்த அமலா பால் 

நடிகை அமலா பால் தனது முன்னாள் கணவரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகை அமலா பால் தனது முன்னாள் கணவரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்துக் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். 

பின்பு இருவரும் தங்களது படங்களில்  கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் விஜய் தனது பெற்றோர் பார்த்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவைச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதில் நெருங்கிய சொந்தபந்தம் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

amala

ஆனால் இந்த திருமணத்தைப் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் அமலா பால் இருந்து வந்தார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் திருமணம் குறித்து மனம் திறந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, ‘விஜய் ஒரு அற்புதமான மனிதர். அவருடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அந்த தம்பதி நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார்.