முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்ட மண்டபம் : இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !

 

முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்ட மண்டபம் : இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !

இந்த மண்டபத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு, இன்று காலை மண்டபத்தின் பின்னால் உள்ள சுற்றுச் சுவரை இடித்துள்ளனர்.

சிவகாசியில் அரசன் கணேசன் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு, இன்று காலை மண்டபத்தின் பின்னால் உள்ள சுற்றுச் சுவரை இடித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி அந்த சுவர் இடிக்கப்பட்டதால் சுவரின் பின்னால் அமர்ந்திருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கினர். 

 

தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கத் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதில் சிக்கிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னறிவிப்பின்றி அந்த மண்டபம் இடிக்கப் பட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. உயிரிழந்த 4 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.