முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் சிவகார்த்தி…எந்த படத்தில் தெரியுமா?

 

முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் சிவகார்த்தி…எந்த படத்தில் தெரியுமா?

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  சிவகார்த்திகேயனின்  14 ஆவது திரைப்படத்திற்கு  ‘அயலான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை  இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில்  ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு ஆகியோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  சிவகார்த்திகேயனின்  14 ஆவது திரைப்படத்திற்கு  ‘அயலான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 


 

இந்நிலையில்  அயலான் படத்தில்  சிவகார்த்திகேயன் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி முருகன்  படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம்.  இதுகுறித்த  அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ttn

இப்படத்தை சிவகார்த்தியின்  ‘டாக்டர்’ படத்தைத்  தயாரிக்கும்  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.