முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் சசி குமார்

 

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் சசி குமார்

நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின்  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின்  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக தன்மை கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடித்த கிராமத்து படங்களுக்கு இன்றளவும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவரின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தையடுத்து நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் போன்ற படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் இவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை மலையாள இயக்குநர் ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்க ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இதில் சசிகுமாருடன் இணைந்து தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,  மஞ்சுபெத்து ரோஸ் என்று பலர் நடிக்கின்றனர். 

இப்படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இதில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும்  இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.