முதல் முறையாக சண்டையில் சிக்கிய சாண்டி! 

 

முதல் முறையாக சண்டையில் சிக்கிய சாண்டி! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3யில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்தனர். அதாவது பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி என்று இரு அணிகளாக உள்ளனர். அதில் வழக்கம் போல் மீரா மற்றும் சேரன் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் மற்றொரு பக்கம் சாண்டியின் செய்த கலகலப்பான செயல் என்று நேற்றைய ஏபிசோட் சற்று குதூகலமாகவே சென்றது. 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் யாரு பிரச்சனைக்கும் செல்லாமல் இருந்த சாண்டி முதல் முறையாக கோபப்பட்டுள்ளார். அந்த புரோமோவில், ‘மதுமிதா, மாரியம்மா… மாரியம்மா… என்று பாட்டுப் பாடி நடனமாடுவது போல் உள்ளது. அதை வழக்கம் போல் சாண்டி கலாய்க்க உடனே மதுமிதா மூஞ்சிய பாரு’ என்று கோபமாகச் சொல்கிறார். 

உடனே சக ஹவுஸ் மேட்ஸ் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் ‘இப்போ தான் சாண்டியின் உண்மையான முகம் வெளியே வருகிறது’ என்று கமெண்ட் செய்துள்ளனர்.