முதல் முறையாக காதல் தோல்வி குறித்து வாய்திறந்த காஜல்!

 

முதல் முறையாக காதல் தோல்வி குறித்து வாய்திறந்த காஜல்!

நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார். 

சென்னை: நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளுள் ஒருவராக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் . படிப்படியாகத் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்த இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். 

இவருக்கு 33 வயதாயாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்விகள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘சினிமாவிற்கு வரும் முன்பே எனக்கு ஒரு காதல் தோல்வி இருந்தது. அதன்பிறகு சினிமாவில் முன்னணிக்கு வந்த பிறகு மீண்டும் ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர் இல்லை. 

kajal

அந்த காதலும் தோல்வியில் முடிய முக்கிய காரணம் நான் அவருடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது தான். காதலுக்கு மிகவும் முக்கியமானது என்றால் அவர்களுடன் நாம் நேரில் சந்தித்து, நேரம் செலவிடுவது தான். ஆனால் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் அந்த காதல் என் கைநழுவிச் சென்றது’ என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.