முதல் போட்டியிலேயே இரட்டை சதமடித்து சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்! குவியும் பாராட்டுகள்!

 

முதல் போட்டியிலேயே இரட்டை சதமடித்து சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்! குவியும் பாராட்டுகள்!

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத் துவங்கியது.

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத் துவங்கியது. இந்த போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி சதத்தைப் பதிவு செய்தார். இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டார். இந்நிலையில், மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக இந்த போட்டியில் களமிறங்கி விளையாடினார்.  முதல் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

mayank

இன்று அணியின் ஸ்கோர் 317 ஆக இருக்கும் போது, ரோகித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இந்த இணை ஜோடி புதிய சாதனையைப் படைத்தது. அதாவது, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இது மூன்றாவது முறையாகும்.  தவிர, தனது அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே  இரட்டை சதமடித்து மயங்க் அகர்வால் சாதித்துள்ளார்.