முதல் நாள் கற்பை இழந்தார் -மறுநாள் தந்தையை இழந்தார் -டீனேஜ் பெண்ணின் பரிதாபம்.

 

முதல் நாள் கற்பை இழந்தார் -மறுநாள் தந்தையை இழந்தார் -டீனேஜ் பெண்ணின் பரிதாபம்.


முதல் நாள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டும் ,மறுநாள் தந்தையை சாலை விபத்தில் இறந்தும் ஒரு டீனேஜ் பெண் பரிதாபமான நிலையிலிருக்கிறார் .

முதல் நாள் கற்பை இழந்தார் -மறுநாள் தந்தையை இழந்தார் -டீனேஜ் பெண்ணின் பரிதாபம்.


உ.பி.யின் கான்பூரில் வசிக்கும் 13 வயதான டீனேஜ் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த ​​கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகிய இருவர் அந்த பெண்ணின் மீது ஆசைப்பட்டார்கள் ,அதனால் அவர்கள் அந்த டீனேஜ் பெண்ணை அடைய திட்டமிட்டார்கள் .இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அந்த சிறுமி தங்களின் விவசாய நிலத்திலிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்தார் . ​​அப்போது கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகிய இருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் .
பின்னர் அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து இந்த பலாத்கார விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் கூறினார் .பின்னர் அந்த தந்தை தன்னுடைய மகளுடன் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த கோலு யாதவ் மற்றும் தீப்பு யாதவ் ஆகியோர் மீது புகார் கூறினார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ,அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார் .இதற்கிடையே அந்த குற்றவாளிகளின் சகோதரர் அந்த பெண்ணின் தந்தையிடம் ,தாங்கள் போலீஸ் அதிகாரியின் மகனென்றும் அதனால் வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினார்கள் .
இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள சாலையில் சென்றபோது ஒரு லாரி மோதி இறந்தார் .அதனால் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இது அந்த குற்றவாளிகளின் சதி வேலை என்று குற்றம் சுமத்தினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

முதல் நாள் கற்பை இழந்தார் -மறுநாள் தந்தையை இழந்தார் -டீனேஜ் பெண்ணின் பரிதாபம்.