முதல் ஆளாக வந்து முதல் ஆளாக சென்ற பாத்திமா பாபு: உண்மையில் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இதுதானாம்!?

 

முதல் ஆளாக வந்து முதல் ஆளாக சென்ற பாத்திமா பாபு: உண்மையில் வெளியேற்றப்பட்டதற்கான  காரணம் இதுதானாம்!?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். 

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் நேற்று நடந்தது. அதில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த பாத்திமா பாபு முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். நாமினேஷன் பிராசஸில் மதுமிதா, மீரா மிதுன், சாக்‌ஷி , கவின், சரவணன், சேரன் மற்றும் ஃபாத்திமா பாபு ஆகியோர் இடம்பெற்றனர். இதில் மதுமிதா ரசிகர்களால் முதல் நாளே காப்பாற்றப்பட ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கலக்கமும், மதுமிதா முகத்தில் கர்வமும் தாண்டவமாடியது.

fathima

இதில் மிகவும் பாசமானவராகப் பார்க்கப்பட்ட பாத்திமா பாபு, டிஆர்பியை உயர்த்த எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்டதாகப் பேசப்படுகிறது. எலிமினேஷன் செய்யப்பட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பாத்திமா பாபு, வனிதாவை மறைமுகமாகத் தாக்க , நேரடியாகவே சொல்லுங்கள் என்று கமல் கொளுத்தி போட வெடித்து தள்ளினார் பாத்திமா. 

fathima

அதாவது வனிதா மற்றவர்களை டாமினேட் செய்கிறார் என்றும் அவரை எதிர்த்து குரல் கொடுக்காமல் பலரும் மௌனம் காக்கிறார்கள் என்றும் தடாலடியாகக் கூறினார். மேலும் மோகன் வைத்யா எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டார் என்று விமர்சித்தார்.

இறுதியாகத் தலைமைப் பொறுப்புக்கு அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோர் தான் தகுதியானவர்கள் என்று கூறியும்,மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விடை பெற்று சென்றார் பாத்திமா பாபு.