முதல்வர் மீது ஸ்டாலினுக்கு பொறாமை:அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்!

 

முதல்வர் மீது  ஸ்டாலினுக்கு பொறாமை:அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்!

இந்தியாவில் அமைதியான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதை எடுத்துக்கூறினால்  முதலீடு கிடைக்கும்.

சென்னை: யாராவது எழுதி தருவதைச் சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை என்று அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

stalin

சென்னையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், வெளிநாட்டுப் பயணம் நல்ல முறை பயணமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீடுகள் என்பது நமது மாநிலத்திற்கு அவசியம். தமிழகத்தில் நிலையை எடுத்துச் சொல்லி, படித்த மாணவர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் அமைதியான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதை எடுத்துக்கூறினால்  முதலீடு கிடைக்கும். முதல்வரின் இந்த பயணத்தைப்  பாராட்ட மனமில்லாமல் பொறாமையால் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். யாராவது எழுதித் தருவதைச் சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை. அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது ‘ என்றார். 

shanmugam

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.