முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முக ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

 

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முக ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்: முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் கடந்த செப்.18-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசியதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.

அதன் அடிப்படையில், முதல்வர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்று ஸ்டாலின் மீது 2 பிரிவுகளின் கீழ் அரசு வழக்கறிஞர் தனசேகரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.