முதலிரவுக்கு சென்றதை தடுத்ததற்காக தந்தையை கொலை செய்த கொடூர மகன்!

 

முதலிரவுக்கு சென்றதை தடுத்ததற்காக தந்தையை கொலை செய்த கொடூர மகன்!

மொய் கணக்கை பார்த்துவிட்டு முதலிரவுக்கு செல் எனக்கூறிய தந்தையை  ரீப்பர் கட்டையை எடுத்து தலையில் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொய் கணக்கை பார்த்துவிட்டு முதலிரவுக்கு செல் எனக்கூறிய தந்தையை  ரீப்பர் கட்டையை எடுத்து தலையில் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகன் இளமதி. நேற்று முன் தினம் நடந்துள்ளது இந்த கொடூர சம்பவம். அன்றைய தினம் இளமதிக்கு முதலிரவு… அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், இளமதியை சண்முகம் அழைத்துள்ளார். திருமணத்திற்கு வந்த மொய் பணம் குறித்த கணக்குவழக்குகளை பார்க்கலாம் என கூறியுள்ளார். தந்தையின் பேச்சைக்கேட்டு இளமதியும் மொய் பணத்தை சரிபார்த்து எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது கணக்கு தவறாக முன்னுக்கு பின் இடித்துள்ளது. இதுகுறித்து சண்முகம், அவரின் மகன் இளமதியிடம் கேட்டுள்ளார். உடனே இளமதி, காலையில் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு எழுந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், முதலிரவு முக்கியமா? கணக்குவழக்கு முக்கியமா? கணக்கை முடித்து சரிபார்த்தப்பின் முதலிரவுக்கு போகலாம் என அறிவுரை கூறியுள்ளார். இதன்பின் இருவரும் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த சண்முகம், அருகில் கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து தன் மகனைத் தாக்கியிருக்கிறார். அந்த ரீப்பரை தந்தையிடமிருந்து பறித்து, அவரின் தலையில் அடித்ததோடு, அவரை இளமதி கீழே தள்ளியிருக்கிறார். உடனே மயக்கமடைந்த சண்முகம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சண்முகத்தின் தம்பி அண்ணாதுரை உடையார் பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இளமதி மீது கொலை வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.