முடிந்தால் என்னை வென்று காட்டுங்கள்: டிடிவிக்கு எதிராக முஷ்டி முறுக்கும் விஜயபாஸ்கர்

 

முடிந்தால் என்னை வென்று காட்டுங்கள்: டிடிவிக்கு எதிராக முஷ்டி முறுக்கும் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிடிவி தினகரன் முடிந்தால் என்னை வெல்லட்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டிடிவி தினகரன் முடிந்தால் என்னை வெல்லட்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: டிடிவி தினகரன் பணத்தை கொண்டு எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். பணத்தை கொடுத்துதான் கூட்டங்களை அவர் கூட்டி வருகிறார். தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று பார்க்கட்டும். நானும் நிற்கிறேன். என்னை வென்று காட்டட்டும்.

பதவி வெறியில் தினகரன் உள்ளார். இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டன் இருப்பான். ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவர் தினகரன். அவர் சசிகலாவின் விசுவாசி அல்ல. சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசியாக உள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலில் சசிகலா படத்தை போட வேண்டாம் என்று கூறியவர் அவர்தான். ஆர்கே .நகர் தேர்தலில் அவருக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது. நான் பிரச்னைகளை கண்டு பயப்படவில்லை என்றார்.