முடிந்தது ‘ஆதித்ய வர்மா…ஃபர்ஸ்ட் காப்பியை பாலாவுக்கு காட்டுவீங்களா பாஸ்?

 

முடிந்தது ‘ஆதித்ய வர்மா…ஃபர்ஸ்ட் காப்பியை பாலாவுக்கு காட்டுவீங்களா பாஸ்?

இப்படிப்பட்ட வதந்திகளை எழுதுபவர்கள் நிச்சயமாக ஏமாறத்தான் போகிறீர்கள். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது என்று சூடாகப் பதிவிட்டிருந்தார். 

இயக்குநர் பாலா இயக்கியிருந்த ‘வர்மா’ படத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு புதிதாக எடுக்கப்பட்டு வந்த ’ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு நேற்றோடு முடிந்ததாக படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

aditiya varma

விக்ரம் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்யா வர்மா’ படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் அப்படமும் டிராப் ஆகிவிட்டதாக  செய்திகள் வெளியாகின. அச்செய்திகளில்  சிறிதும் உண்மையில்லை என கொதித்த  தயாரிப்பாளர் முகேஷ்.ஆர்.மேத்தா,’ இப்படிப்பட்ட வதந்திகளை எழுதுபவர்கள் நிச்சயமாக ஏமாறத்தான் போகிறீர்கள். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது என்று சூடாகப் பதிவிட்டிருந்தார். 

 

ஆனால் அதற்குப் பின்னர் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ, படக்குழுவினர் தரப்பிலிருந்தோ படம் குறித்த அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அதை ஒட்டி நாயகன் துருவ் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பாருங்கள் என்ற கமெண்டுடன் 7 செகண்ட் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் முகேஷ்.

mukesh r metha

முன்னதாக இப்படத்தை தெலுங்கு ஒரிஜினலை விட பல மடங்கு தரமாக  ஜூன் மாதம் தமிழில் தருவோம் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நேற்றுதான் முடிந்துள்ள நிலையில் படம் ஜூனில் ரிலீஸாவது சந்தேகமே. எப்ப வேணும்னாலும் வாங்க. ஃபர்ஸ்ட் காப்பியை ஃபர்ஸ்ட் டைரக்டர் பாலாவுக்கு காட்டுவீங்களா பாஸ்?