மீ டூ விவகாரம்: லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் வழக்கு!

 

மீ டூ விவகாரம்: லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் வழக்கு!

மீ டூ பிரசாரத்தை பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை: மீ டூ பிரசாரத்தை பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேலை பாலியல் புகார் தெரிவித்திருந்தார். லீனாவின் புகாரை மறுத்து இயக்குநர் சுசி கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில் மீ டூ இயக்கத்தை சொந்த பழிவாங்களுக்காக லீனா மணிமேலை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய இயக்குநர் சுசி கணேசன், தன் மீது அவதூறு பரப்பியதால் லீனா மணிமேகலை மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மீ டூ பிரசாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகக் கூறி லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மீ டூ-வை பயன்படுத்தி தவறிழைக்காத ஆண்களைத் தாக்க முனையும் சூழ்ச்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட சுசி கணேசன் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.