மீ டூ எதிரொலி: டாடா குழுமத்தின் சுஹேல் சேத் அதிரடி நீக்கம்

 

மீ டூ எதிரொலி: டாடா குழுமத்தின் சுஹேல் சேத் அதிரடி நீக்கம்

மீ டூ சர்ச்சையில் சிக்கியதால் டாடா குழுமத்தின் ஆலோசகர் சுஹேல் சேத் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை: மீ டூ சர்ச்சையில் சிக்கியதால் டாடா குழுமத்தின் ஆலோசகர் சுஹேல் சேத் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்குத் தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த மீ டூ(Me Too) என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல்வேறு பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டாடா குழுமத்தின் ஆலோசகராக இருக்கும் சுஹேல் சேத் மீது திரைப்பட இயக்குநர் நடஷ்ஜா ரத்தோர், மாடல் தியாந்த்ரா சோரஸ், எழுத்தாளர் இரா திரிவேதி உள்ளிட்ட 6 பெண்கள் மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் டாடா குழுமத்திற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சுஹேல் சேத் தங்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுவதாக டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், சுஹேல் சேத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறதாக டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.