மீராவுடன் தொடரும் சண்டை: பெரிய கும்பிடு போட்டுவிட்டு கிளம்பிய சேரன்
பிக் பாஸ் சீசன் 3-ன் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3-ன் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் ஆரம்பத்திலேயே சேரனின் மல்லுக்கட்டினார் மீரா மிதுன். அப்போது சேரன் நான் உன்கிட்ட பேசமாட்டேன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன். நீ என்கிட்டே பேசவேணாம் என்று கத்தினார். இருப்பினும் சேரனை நாட்டாமை என்று மதிக்காமல் பிக் பாஸ் வீட்டில் சுற்றி திரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் மீரா சேரனை பார்த்து, நீங்க நியாயமா பேசுற மாதிரியே தெரியல என்று கூறி கத்துகிறார். வீட்டில் வாக்குவாதம் அதிகரிக்க, எழுந்து நின்ற சேரன் தலைக்குமேல் கையை தூக்கி ஒரு பெரிய கும்பிடாக போட்டு, தயவு செஞ்சி என்ன எல்லாரும் மன்னிச்சிக்கோங்க. இனிமே நான் யார்கிட்டயும் பேசல, யார் கிட்டயும் பழகல என்று கூற மதுமிதா என்ன பேசுறீங்க சேரன் சார் என்று கேட்க, நான் இல்ல, நான் வேற ஆளு என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரும் படியாக அந்த புரொமோ முடிகிறது.
#Day32 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/azQHqX3UPj
— Vijay Television (@vijaytelevision) July 25, 2019
ஆரம்பத்திலிருந்தே சேரனை வசைபாடும் வரும் மீரா மிதுன் இந்தமுறை எதற்காக மல்லுக்கட்டுகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.