மீண்டும் வழிய தொடங்கிய முன்னாள் கணவர்…பதிலடி கொடுத்த நடிகை மஞ்சு வாரியர்

 

மீண்டும் வழிய தொடங்கிய முன்னாள் கணவர்…பதிலடி கொடுத்த நடிகை மஞ்சு வாரியர்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அசுரன் படத்தில் பச்சையம்மா கேரக்டரில் மிரட்டி இருந்தார்.

மலையாளத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலீப் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

manju

இதனால் தற்போது வரை தனியாக வாழ்ந்து வரும் மஞ்சு வாரியர் மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் இயக்குநர்  ஸ்ரீகுமார் இயக்கத்தில் மோகன்  ஒடியன் திரைப்படம் நல்ல வரவேற்பை  பெற்றது. இதையடுத்து  தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அசுரன் படத்தில் பச்சையம்மா கேரக்டரில் மிரட்டி இருந்தார்.

ttn

இதனிடையே நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்க திட்டம் தீட்டிய  வழக்கில் திலீப் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப் சமீபத்தில் பேட்டி ஒன்றில், எனக்கு மஞ்சு வாரியர் மீது எந்த கோபமும், வன்மமும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து மஞ்சு வாரியரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ttn

அதற்கு சற்று யோசிக்காத மஞ்சு வாரியர், ‘திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம். ஆனால் நிஜத்தில்  ஒரு காலம் நடக்காது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.